என் இசை பயணம்

                                                      இந்த பதிவில் என்னுடைய இசை பயணம் பற்றி பார்க்கலாம் என்னுடைய இசை பயணம் என்றதும் நான் பெரிய இசை மேதை என்று நீங்க நினைத்து விட வேண்டாம் நான் இசையை பொறுத்த வரை பெரிய டம்மி பீஸ் .
                               இசையை பொறுத்த வரை நான் கற்றது முழுவதும் கேள்வி ஞானம் தான் அதற்கு என்று நன் பெரிய பாடகனும் இல்லை நான் பாடினால் சத்தியமாக சகிக்காது ஆனால் நான் பெரிய பாத்ரூம் சிங்கர் .

                நான் இசையை பற்றி சிறுவயது முதல் எனது அனுபவங்களையும் மேலும் யார் யார் எனக்கு இசை அல்லது சினிமா பாடல்களை அறிமுக படுத்தினார்கள் என்றும் சினிமாவை பற்றி இல்லாமல் மேலும் ஆன்மீக பாடல்களையும் எனக்கு காட்டியவர்கள் எனக்கு அதனால் ஏற்பட்ட அனுபவங்களையும் என் நண்பர்களுக்கு பிடித்த இசைஅமைப்பாளர்களை பற்றியும் அதனால் எற்பட்ட சின்ன சின்ன சண்டைகளை பற்றி  பகிர போகிறேன் இந்த பதிவில் பல கிளை கதைகள் வர வாய்ப்பு இருக்கிறது அப்படி வந்தால் அதனை பற்றி அவ்வப்போதும் இல்லையென்றால் தனிபதிவிலும் பாப்போம் .

                                         முதலில் எனக்கு அறிமுகம் ஆனது என்  நினைவில் உள்ளவரை  எங்கள் ஊர் சவேரியார்பட்டினம் அங்கு உள்ள ஆலயத்தில் போடும் கிறிஸ்தவ பாடல்கள் தான் என் நினைவில் உள்ளவரை  எப்போதும் போல் கேளுங்கள் தரப்படும் என்ற பாடல்  தான் இந்த பாடல் உள்ள ஒரு பியூட்டி என்னன்னா எங்க ஊருல எந்த விழ நடந்தாலும் கல்யாணம் காது குத்து நாளும் முத்தனேந்தல் எம் எம் எஸ் ல இருந்து தான் பாட்டு போடுவாங்க அவங்கே போடுற  மொத பாட்டே இது தான் இதுனால தான் பின்னாடி இந்த அருமையான பாட்ட கேட்டாலே நான்  ஓடிருவேன்.

                  அடுத்து என்னதான் என்னுடைய சொந்த ஊர் (அம்மாவினுடையது ) சவெரியார்பட்டினம் என்றாலும் என் அம்மா பணி நிமித்தமாக நாங்கள் தங்கி இருந்தது கிருங்காகோட்டை  என்ற ஊரில் இங்கு எனக்கு முக்கியம் என் அப்பாவை பற்றி தான் சொல்ல வேண்டும் அனால் அப்பா இப்போது உயிருடன் இல்லை அவர் தான் ஒவ்வொவொரு தடவை ராணுவத்தில் இருந்து வரும் போதும் ஒரு டேப் அல்லது ஒரு ரேடியோ புதிதாகவும் ஒரு ஐந்து இந்தி கேசட்டுகளையும் கொண்டுவருவார் அப்பர் எல்லாம் நம் சிலோன் வானொலி நிலையம் தான் அப்போது எங்கள் ஊரில் அதாவது சவேரியார்படினத்தில் சந்தியாகு தாத்தா அவர்கள் இன்றுவரை எங்கள் ஊரில் அவரை நான் டிவி தாத்தா என்று தான் கூப்பிடுவேன் அதற்கு காரணம்  சிறுவயதில் அவர் வீட்டில் டிவி பார்த்தது தான். இதில் நான் வார விடுமுறையை சவேரியார்பட்டினதிலும் மற்ற நாட்களை கிருங்காகோட்டையிலும் பள்ளி யை மானமதுரையிலும் கற்றதால் எனக்கு நண்பர்கள் மிக அதிகம் . அதனால் கூட அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது .

                               இதில் கிருங்காகோட்டையில் சில வாரங்கள் இருந்தால் செம ஆட்டம் தான் குவாட்டர்சில் என் நண்பர்கள் பாலமுருகன் இவனுடன் நாங்கள் மதுரை வந்தபின்பும் தொடர்பில் உள்ளேன் அப்பறம் அபி,அருண்,சிநேகா,ராகவி,நதியா போன்றவர்களுடன் சேர்ந்து ஐஸ் பாய்ஸ் விளையாடுவோம் அப்போதும் விளையாட்டாக ஆரம்பித்தது தான் பாட்டுக்கு பாட்டு அதில்தான் எனக்கு மிக பிடித்த பாடலாக என் மனதில் இருந்தது பம்பாய் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும்

                                               இப்படத்தில் எனக்கு முதலில் பிடித்த பாடல் கண்ணாளனே என்ற பாடல் அப்பறம் பள்ளியில்  அரபி கடலோரம் பாடலி மாற்றி பாடியதால் அந்த பாடலில் மீது ஒரு விருப்பம் வந்த ஆனால் முதல் வகுப்பில் படிக்கும் பொது எனக்கு யார் இசை அமைப்பாளர் போன்றவை எல்லாம் சுத்தமாக தெரியாது சும்மா பாட்டை மட்டும் கேட்பேன் . இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில்  பாப்போம்.

Comments