ரெஜீஸ் அத்தான் மேரி அக்கா – வெள்ளி விழா வாழ்த்து
உலகைப் படைத்த கடவுள் நல்லது எனக் கண்டார். ஆண் பெண் உறவு அற்புதமானது. இருவரும் இணைந்து உருவாக்கும் குடும்பம் திருக்குடும்பமாகிட வேண்டும் என விரும்பினார். இதனாலேயே மனுவுருவான மாபரன் கன்னிமரியின் திருவயிற்றில் தங்கியிருந்து, வளனாரை வளர்ப்புத் தகப்பனாக்கி திருக்குடும்பத்தை வரலாறாக்கினார். அந்தக் குடும்பத்தில் முப்பது ஆண்டுகள் பெற்றோருக்குப் பணிந்து வாழ்ந்து, கீழ்ப்படிந்து நடந்து இளையோருக்கு மாதிரிகையும் ஆனார். இறைவன்தாமே இணைப்பவரை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்று கூறிய இறைமகன்தாமே மங்களகரமான மணவாழ்வை ஆசீர்வதித்து, மனம் ஒத்து வாழும் மனங்களுக்கு மடியில் தவழ மழலைகளையும் தந்து ஆசீர்வதிக்கின்றார். “வயிற்றின் கனி இறைவன் தந்த வெகுமதி” என்று தாவீது அரசர் 127ஆவது திருப்பாடலில் கூறுகிறார். இருபத்தைந்து ஆண்டுகள் மணவாழ்வில் இறைவன் தந்த பரிசே. அதிலும் குழந்தைச் செல்வம் என்பது இறைவன் அருளும் வெகுமதியே. இத்தகைய வெகுமதியைப் பெற்ற தம்பதியரும், அவர்களது குழந்தைகளும் பேறுபெற்றவர்களே. இந்த இனிய நாளில் மிக முக்கியமாக இன்று (14/12/2026) காதலர் தினத்தன்று தனது 25 வது திருமண நாளை...

